Saturday, 14 June 2025

சுக்கு நோய்களின் காலன்

 சுக்கு நோய்களின் காலன்

    பல ஆண்டுகளாக நம் தயாரிப்பில் சுக்கு கல்பம் தொடர்ந்து தயாரிக்கப்பட்டு நம் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்துள்ளது. பொதுவாக சுக்கு அஜீரணம், பசியின்மை, வாயு தொல்லை போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம்; அது உணவிலும் சேர்க்கப்பட்டு வந்திருக்கிறது இது நாம் அனைவரும் அறிந்த விஷயம். நாம் அறியாத விஷயங்களையும் இங்கு பார்ப்போம். நண்பர்கள் பொதுவாக என்னிடம் கேட்கும் கேள்வி அனைத்து நோய்களுக்கும் ஒரே மருந்து இருக்கிறதா ? 

அது விளையாட்டாகவோ? வேடிக்கையாகவோ? 

கேட்கிறார்கள் அது எனக்கு தெரியாது!


என்னிடம் இந்த கேள்வி கேட்கும் பொழுது இதற்கு அஸ்வகந்தி ஒரு தீர்வு ஆகுமா? கரிசலாங்கண்ணியை பயன்படுத்தினால் போதுமே! வேம்பு ஒரு சிறந்த காயகல்பம்! என்றெல்லாம் கூறுவது உண்டு. ஆனால் என்னை பொறுத்தவரை சித்தர்கள் கூறியிருப்பதும் சரி 

"சுக்கு என்றால் ஒரு மருந்து பொருள் மட்டும் அல்ல, அது சகலவித நோய்களையும் குணமாக்கக்கூடிய ஆற்றல் படைத்தது"  

அகத்தியர் போகர் போன்ற சித்தர்களின் வாக்கும் இதேதான்


    நீங்கள் தினந்தோறும் காலை, மாலை டீ குடிக்கும் பொழுது இந்த சுக்கு தூளிலிருந்து அரை டீஸ்பூன் இந்த டீக்குள் சேர்த்து குடித்து பாருங்கள் இதன் சுவைக்கு நீங்கள் அடிமையாகி விடுவீர்கள். பிறகு கூடவே இந்த சுவை உங்களுக்கு எந்த ஒரு நோய் தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பு கொடுக்கும்.






நீர்க்கோவை, வாதபித்த ஆபாசக்கெடுதி, மலபந்தம், சூலை இவற்றிற்கு

    சுக்கு பலம் 12-க்கு சுண்ணாம்பில் 4 பலம் கவசித்து, மஞ்சளில் 4 பலம் கவசித்து, எருமைச் சாணத்தில் 4 பலம் கவசித்து, கவசங் கருகச் சுட்டு எடுத்துச் சீவி வைத்துக் கொண்டு, மூன்று தினுசிலும் 3 வராகனெடை எடுத்து நசுக்கி அரைப்படி சலத்தில் போட்டுக் காய்ச்சி வீசம் படியாகச் சுண்டின பின்பு, பனங்கற்கண்டு, நெய் இவைகளைக் கலந்து இளஞ்சூடாகச் சாப்பிட்டு வரவேண்டும்.













பலரும் சுக்கு Process-ன் போது Micro dust-ஐ Remove செய்வது இல்லை. ஆனால் இது கண்டிப்பாக Remove செய்யப்பட வேண்டும்.

அகத்தியர் 

"சுக்குமிகத் தாதுவாம் சொல்லரிய தீபனமாம் 

மிக்கவரு மாமம்போ மெல்லி நல்லீர் தக்கதொரு 

மூக்குதீர் பாய்ச்சல் போம் மூலரோகத் தினோடு 

தாக்குந் தாநோய் போகுந்தான்"



வீரமாமுனிவர்

"உன்னிய சுக்கு முதல் சரக்கு இதின்

       உத்தமமானக் குணங்கேளீர் 

பன்னிய சர்வரோக மெல்லாந் தீரும் 

       பார்த்து அறிந்துகொள் ஞானப்பெண்ணே"


அகத்தியர் 

"பற்றிட்ட சுக்கதனால் சர்வரோகம் போகும்"







WE FIRST PRIORITY FOR GIVEN THIS VEGETARIANS ONLY

சன்மார்க்க சங்கம் சார்ந்து உள்ளவர்கள் இம்மருந்தை நம்மிடம் வாங்கி பயனடையலாம். 



உங்களோடு இணைந்திருப்பது

அகத்தியர் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம், கோபிசெட்டிபாளையம்

2 comments:

  1. சரியான விளக்கங்கள் ஐயா நன்றி

    ReplyDelete

ஜீவகாருண்யம் - தானம்

ஜீவகாருண்யம்  -  தானம்  திருக்குறள்  தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்  வானம் வழங்கா தெனின்  [ தானமும், தவமும் மக்களிட...