Wednesday, 30 January 2019

SIDDHARS APHRODISIAC - பஞ்ச காமஊக்கிகள் - ADULTS ONLY

SIDDHARS APHRODISIAC   

ADULTS ONLY

சித்தர்களின் பஞ்ச காமஊக்கிகள் 

சித்தர்கள் அருளிய பஞ்ச காம ஊக்கிகள் (aphrodisiac foods) 
இல்லறம் நல்லறம் ஆக சாதாரண கீரை உணவுகளை வைத்தே ஆண் பெண் இருபாலாருடைய சக்திகளை மேம்படுத்தும் முறைகள். இதை போன்ற பல பதிவுகளை இணையதளங்களில் பார்க்க முடிகிறது. இதுபோன்ற பதிவுகளில் பலமுறைகள் முழுமையாய் விளக்காததும் தவறான முறைகளாகவும் பார்க்க முடிகிறது. அனுபவம் இல்லாத பல drugs and foods மனித உடலுக்கு தீங்காகவும் விஷமாகவும் மாற  வாய்ப்பு உள்ளது. சித்தர்கள் எழுதிய மருத்துவ முறைகளில் இதெற்கென குறிப்பிடும் பல மருந்துகள் இருக்கின்றன காமேஸ்வர லேகியம், மதன காமேஸ்வர குளிகை, லிங்க செந்தூரம், தம்பன மாத்திரை, வெள்ளி பஸ்ப செந்தூரம், தங்க பஸ்ப செந்தூரம், அய செந்தூரம்  என நூற்றுக்கணக்கான மருந்துகள் உள்ளன. ஆயுர்வேதத்தில் வாஜீகரணம் (குதிரை போன்ற இந்திரிய பலம் உள்ளவன்) என்ற பெயரில் இதெற்கென மருந்து முறைகள், பழக்கவழக்கங்கள் என அத்தியாயங்கள் உள்ளன. 

இங்கு இன்று நாம் பார்க்கப்போவது நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய கீரையை வைத்து பயன்பெறும் முறைகளும் அதற்கான நம்பகமான  சாட்சிகளும். எந்த சந்தேகமும் பயமும் இல்லாமல் இந்த முறைகளை பின்பற்றலாம். இதை போன்ற பதிவுகளை ஆபாச பதிவாகவோ கிசுகிசு ஆகவோ எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். (MATTERS FOR SEXUAL AWARENESS)  






தாளி முருங்கைத் தழைதூது ளம்பசலை 
வாளிலறு கீரையுநெய் வார்த்துண்ணி லாளியென 
விஞ்சுவார் போகத்தில் வீம்புரைத்த பெண்களெலாங் 
கெஞ்சுவார் பின்வாங்கிக் கேள் 

பொருள் : தாளிக்கீரை, முருங்கை கீரை, தூதுவளை கீரை, அறுகீரை, 
பசலை கீரை இந்த இந்து கீரைகளையும் தினமும் மத்திய உணவில் 
நெய்யோடு சேர்த்து தாளித்து வதக்கி அன்னத்தோடு சேர்த்து சாப்பிட்டு 
வர வேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வர மேற்சொன்ன பாட்டில் உள்ளது 
போல பலன்கள் கிட்டும். இது சாதாரண இல்லறவாழ்க்கை 
நடத்துவோர்களுக்கு பொருந்தும். அதிக பலவீனம் உடையவர்களாக 
இருந்தால் இந்த முறைகள் பெரிய பலன் தராது. எந்த ஒரு முறையையும் 
மிகை படுத்திக்கூறி மற்றவர் மனதில் பலவித எண்ணங்களை 
உண்டாக்க கூடாது. எனவே பொருத்தமான விளக்கம் தந்துள்ளேன்.        



மேற்கண்ட பாட்டில் யாழியை போன்று பலம் பெறுவான் என்று குறிப்பிட்டுள்ளார். இதில் ஒரு மறை பொருள் உள்ளது. ஒரு ஆணின் பலத்தை இங்கு சித்தர் யாழி மிருகத்திற்கு ஒப்பிட்டுள்ளார். அதற்கு காரணம் யாழி மிருகம் சிங்க உருவம் சிங்க பலம் யானை துதிக்கையோடு உருவத்தில் யானையை விட பெரிய உருவமாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. 







ஆண் சிங்கம் பெண் சிங்கதோடு இணையும் பொது ஒரு நாளுக்கு 30 முறைகளுக்கு மேல் உடல் தொடர்பு வைத்துக்கொள்ளும். அந்த அளவுக்கு மேற்கண்ட கீரைகள் ஒரு ஆண்மகனுக்கு சக்தியளிக்கும் என்பதற்காக சித்தர்கள் இந்த வாஜீகரண உணவையும் அதன் பலனையும் யாழி மிருக பலத்திற்கு ஒப்பிட்டுள்ளார். இது விரைவில் குழந்தை வரம் அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.   








இந்த உணவு முறைகள் வாஜீகரணதில் அடிப்படை ஆகும். வைத்திய முறைகளில் லேகியம், மாத்திரை, பஸ்பம், செந்தூரம் என பலவிதமான (aphrodisiac) முறைகள் உள்ளன. இது போன்ற முறைகளை அனைவராலும் அனுபவிக்க முடிவதில்லை காரணம் இவை எங்கு கிடைக்கும் எவ்வாறு இதுபோன்ற வாஜீகரண முறைகளை அடைவது என்ற சந்தேகம். நல்ல முறையில் சித்தவைத்தியம் செய்யும் வைத்தியர்களிடத்தில் இதுபோன்ற மருந்துகளை பெறலாம்.  

இங்கு விளக்கப்பட்ட முறையில் கீரையை உண்ணும் போது கண்டிப்பாக நெய்யை சேர்த்துத்தான் உண்ண வேண்டும். நெய் சேர்க்காமல் உண்டால் எந்த பலனும் கண்டிப்பாக இருக்காது. நெய் மட்டுமே இந்த கீரைகளுடன் அனுபானமாக சென்றால் தாதுவிருத்தி, இந்திரிய (ஆண், பெண் சக்தி) விருத்தியை செய்யும். நான் படித்த ஒரு முகமதியர்களின் நூலில் முகமது ஸல் (நபிகள் நாயகம்) பசலை கீரையை அதிகம் உண்ணாதீர்கள் இதனால் ஆண்மை பலம் குன்றிவிடும் என்று குறிப்பிட்டுள்ளார். இங்கு தேரையர் பசலை சிங்கம் போல் பலம் ஏற்படும் என்று குறிப்பிடுகிறார் ஆனால் இதை நன்மை பெற எடுக்க வேண்டும் என்றால் நெய்யோடு உண்ணவேண்டும். நெய் இல்லாமல் இந்த கீரையை சேர்த்தால் நபிகள் நாயகம் கூறியது போல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த ஒரே மூலிகை செய்யும் எதிர்மாறான செயல்கள் எனக்கு ஹோமியோபதியின் தத்துவமான LIKE CURE LIKE-யை நினைவுபடுத்துகிறது.         

எந்த ஒரு கீரையும் உடலில் உஷ்ணத்தை அதிகரிக்க செய்யும் அதை நெய்யோடு சேர்க்கும்போது உடலில் அதன் உஷ்ணம் சேராமல் நன்மையான பலன்களை மட்டுமே தரும். இங்கு கூறப்பட்ட ஐந்து கீரைகளும் உணவில் சேர்க்கப்படும்போது நெய்யோடு சேர்த்தால் மட்டுமே பலன் அளிக்கும்.  
 





DR.ANBU GANAPATHI VIDEO



சித்தர்கள் நெறியும் சைவமும் மருத்துவமும் தோன்றி வளர்க்கப்பட்ட இந்த தமிழ்நாட்டில் வாழும் மக்கள் இல்லற வாழ்வில் எந்த ஒரு குறையும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ நல்ல மனமுடனும், ஜீவகாருண்ய நிமித்தமாகவும் இந்த பதிவை வெளியிடுகிறேன். இதில் என்னால் இயன்ற வரை ஆபாசமில்லாமல் விளக்கமும் அதற்கான பொருத்தமான படங்களும் கொடுத்துள்ளேன்.    

வாழ்க வளமுடன்  
தொடரும் 



Saturday, 26 January 2019

வசம்பு - பிள்ளை வளர்த்தி



வசம்பு - பிள்ளை வளர்த்தி 

போலியோ சொட்டுமருந்து இல்லாத காலத்தில் பிறந்த குழந்தைகள் நூறு வயது வரை ஆரோக்கியமாகத்தான் இருந்திருக்கிறார்கள் இன்றய நம் தாத்தா பாட்டிகள். அந்த காலத்தில் சித்த வைத்திய பிரிவில் பாலர் சிகிச்சை என்ற தனி மருத்துவ பகுதியே இருந்தது. அதில் பாலகுடோரி, பாலசஞ்சீவி, கோரோசனை மாத்திரை, கஸ்தூரி மாத்திரை இன்னும் ஏராளமான மருந்துகள் வழக்கத்தில் இருந்துவந்தன. 


அல்லோபதி (English medicine) வருகைக்கு பின் குழந்தைகளுக்கு ஊசி, சிரப், டேப்ளெட்ஸ் என ஆங்கில மருந்துகள் பரவலால் குழந்தை வாகடம், வாலை வாகடம் என்ற நம் மருந்துகள் அழிந்து வருகின்றன. இன்னும் முழுதாக அழியவில்லை இன்றும் நான் என்னிடம் வரும் தாய்மார்களுக்கு பாலகுடோரி, பாலசஞ்சீவி, கோரோசனை மாத்திரை, கஸ்தூரி மாத்திரை மற்றும் வசம்பு பிரயோகம் போன்றவற்றை வழங்கித்தான் வருகிறேன். அந்த குழந்தைகள் அனைவரும் ஆரோக்கியம் மற்றும் நோய்எதிர்ப்பு தன்மையோடு உள்ளதை அனுபவ ரீதியாக பார்த்திருக்கிறேன்.         




இந்த பதிவில் வசம்பை பயன்படுத்தி குழந்தை வளர்க்கும் முறையை பதிவிடுகிறேன். இது மூலிகை மணி கண்ணப்பர் அனுபவ ரீதியான முறைகள். சந்தேகம் அற்ற நிச்சயப்படுத்தப்பட்ட மருந்து (proof drug). இங்கு வசம்பை சுத்தி செய்யும் முறை சொல்லவில்லை கண்டிப்பாக வசம்பை பயன்படுத்தும் முன் அதை சுத்தி செய்ய வேண்டும். அதாவது சுத்தி என்றால் PURIFICATION. அதன் முறையையும் இங்கு பதிவிடுகிறேன். சுத்தி செய்யாத வசம்பு பயன்படுத்த கூடாது. சுத்தி செய்த வசம்பு என்னிடம் கிடைக்கும் தேவைப்படுவோர் இறுதியில் தரப்பட்டிருக்கும் என் மொபைல் எண்ணை அழைக்கவும் (FOR THE PURPOSE OF MARKETING AND SALES). முடிந்தவர்கள் வீட்டிலேயே சுத்தி செய்துகொள்ளலாம். 

வசம்பு சுத்தி முறை    
வசம்பை இரண்டு சென்டிமீட்டர் நீளமுள்ளதாக வெட்டிக்கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் வெட்டிய வசம்பு துண்டுகளை போட்டு இரண்டு டீஸ்பூன் நெய் விடவும் அதை  வைத்து 10 நிமிடம் வேவிக்கவும். பின் அடுப்பில்  இருந்து இறக்கி ஆரவைக்கவும். பின் வசம்பு துண்டுகளை கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்தவும். வசம்பு நெய்ப்பசையுடன் வறண்டு இருக்கவேண்டும் ஆனால் அதிக நெய்யால் சொதசொதப்பாகவும் இருக்கக்கூடாது. இந்த வசம்பை வேண்டிய நேரங்களில் கீழே கொடுக்கப்பட்டவாறு கல்லில் உரைத்தும் குழந்தைக்கு வார்க்கலாம். குழந்தைக்கு பேதி காணும் நேரத்தில் சுத்தி செய்த வசம்பை நெருப்பில் காட்டி கருக்கி அதன் சாம்பல் ஒரு சிட்டிகை உடன் தேன் கலந்து வார்க்கலாம். கீழே கொடுக்கப்பட்ட வசம்பு பற்றிய பக்கங்களை முழுவதும் படித்து விட்டு அதற்கு தகுந்தாற்போல் பயன்படுத்தி கொள்ளுங்கள்.     


சுத்தி செய்த வசம்பு 



குழந்தைகளுக்கு வசம்பு தருவதை பற்றி வீட்டில் உள்ள பெரியவர்களின் யோசனைகளையும் கேட்டுக்கொள்ளுங்கள். ஆரம்பத்தில் சிட்டிகை அளவு பயன்படுத்தலாம்.  குழந்தை பிறந்த 5, 6 மாதத்தின் தொடக்கத்திலேயே கொடுக்க ஆரம்பிக்கலாம். கூடுமானவரை  குழந்தைகளுக்கு பயன்படுத்தும் போது வசம்பு நன்கு தீயில் சுட்டு சாம்பல் கங்கு வெண்ணிறம் அடைந்து இருக்கும் அதில் ஒரு சிட்டிகையை வாரத்திற்கு 3 வேளை வரை கொடுக்கலாம். (சுத்தி செய்த வசம்பு). TO IMPROVE THE CHILDREN VITALITY  













































பாலகுடோரி, பாலசஞ்சீவி, கோரோசனை மாத்திரை, 

கஸ்தூரி மாத்திரை தேவைப்படுபவர்கள் கீழே உள்ள 

எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் 






















Wednesday, 23 January 2019

புளியாரையின் புகழ்




புளியாரையின் புகழ் 

தரை ஒட்டி படரும் சிறிய செடியினம் இதன் பயன்கள் அனேகம். புளிப்பு சுவையை உடையது. காயசித்தி மூலிகைகளில் இதுவும் ஒன்று. மலைகளிலும் சமவெளிகளில் வளரக்கூடியது. வீட்டில் பயிர் செய்து வளர்த்தலாம். இந்த கீரையை தனியாக பொரியலும், சாம்பார்களிலும் சேர்த்து பயன்படுத்தலாம். உணவின் ருசியை அதிகரிக்க செய்யும்.         

சித்த மருத்துவம் தழைத்தோங்கவும். தமிழ் மக்கள் அனைவரும் சத்தான உணவுகளை உண்ணவேண்டும், நோய் எதுவும் வராமல் ஆரோக்கியமாக வாழ வேண்டும்  என்ற பேராசையுடன் தமிழ் இனத்துக்காக இந்த ஒளஷதத்தின் பயன்களை வெளியிடுகிறேன்.




புளியாரை பற்றிய கருத்துக்களை நான் சொல்லி பெயர்வாங்கி கொள்வதை விட கடந்த நூற்றாண்டின் வைத்திய ஜாம்பவான்களான மூலிகை மணி கண்ணப்பர் மற்றும் வைத்திய ரத்தினம் ஜட்ஜ் வி.பலராமய்யா போன்றோர்களின் கருத்தை மட்டும் இங்கு பதிவிடுகிறேன். 










புளியாரை மூலிகை இரண்டு விதம் உண்டு நம் ஊர்களில் இருக்கும் புளியாரை மஞ்சள் நிற பூ பூக்கும் செடியினம். அதே புளியாரை மலைக்காடுகளில் குளிர்ச்சி நிறைந்த பிரதேசங்களில் ஊதா நிற சற்று பிங்க் நிறத்துடனும் பூ பூக்கும் செடியினம். என் அனுபவத்தில் மஞ்சள் நிற புளியாரை பல மருந்துகளிலும் உணவாகவும் பயன்படுத்தியுள்ளேன். ஆனால் நீல பூ பூக்கும் புளியாரையை நான் பல மலை பகுதிகளில் பார்த்திருக்கிறேன் இன்னும் பயன்படுத்தியது இல்லை.     

   


                  



    




     



       

            




           






   


   



 புளியாரையின் அனுபவ ரீதியான உபயோகம் பாஷாணத்தை கையாளும் வைத்தியர்களுக்கு வீர பாஷாணம் மூலம் எதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு புளியாரையை 3 அல்லது 4 நாட்கள் அரைத்து குடித்து வந்தால் அல்லது பச்சை கீரையை அப்படியே உண்டாலும் வீர பாஷாண விஷம் முறிவுஅடையும். 



வாழ்க தமிழ் 
ஓம் சரஹணபவ     
                                                                                                                நன்றி 
                                                                                                                இப்படிக்கு 
                                                                                                                திருவருள்பிரகாசம் 
















ஜீவகாருண்யம் - தானம்

ஜீவகாருண்யம்  -  தானம்  திருக்குறள்  தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்  வானம் வழங்கா தெனின்  [ தானமும், தவமும் மக்களிட...