Saturday, 27 April 2019

மார்க்கண்டேயருக்கு அருளியது

மார்க்கண்டேயருக்கு அருளியது 


பாடல் : தேவாரம் 7 ஆம் திருமுறை 

பாடியவர் : சுந்தரர் 

பாடல் பெற்ற இடம் : ஆவடுதுறை 

இறைவன் : மாசிலாமணி நாதர், அதுல்ய குஜாம்பிகை  







பாடல் 1 
"மறையவன் ஒரு மாணி வந்தடைய 
        வாரமாய் அவன் ஆருயிர் நிறுத்தக் 
கறைகொள் வேலுடைக் காலனைக் காலாற் 
        கடந்த காரணங் கண்டு கண்டடியேன் 
இறைவன் எம் பெருமான் என்று எப்போதும் 
        ஏத்தி ஏத்தி நின்று அஞ்சலி செய்து உன் 
அறைகொள் சேவடிக் கன்பொடும் அடைந்தேன் 
        ஆவடுதுறை ஆதி எம்மானே "


பொருளுரை 
மறையவன் - மார்க்கண்டேயன்  
மாணி - பிரம்மச்சாரி 
வாரமாய் - அன்போடு 
கறைகொள் வேலுடை - ரத்தக்கறை பொருந்திய எம தருமனின் ஆயுதம் 
கடந்த - வென்ற 
அஞ்சலி செய்து - கும்பிட்டு 
அறைகொள் - ஜல் ஜல் என்ற சிலம்ப ஒலி பொருந்திய 




















தேவாரம் தொடரும் 




No comments:

Post a Comment

ஜீவகாருண்யம் - தானம்

ஜீவகாருண்யம்  -  தானம்  திருக்குறள்  தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்  வானம் வழங்கா தெனின்  [ தானமும், தவமும் மக்களிட...