சிவன் சிலந்திக்கு அருளியது
பாடல் : தேவாரம் 7 ஆம் திருமுறை
பாடியவர் : சுந்தரர்
பாடல் பெற்ற இடம் : ஆவடுதுறை
இறைவன் : மாசிலாமணி நாதர், அதுல்ய குஜாம்பிகை
சுந்தரர் தேவாரம் பாடல் 2
"தெருண்ட வாயிடை நூல் கொண்டு சிலந்தி
சித்திரப் பந்தர் சிக்கென இயற்றச்
சுருண்ட செஞ்சடையாய் அது தன்னைச்
சோழனாக்கிய தொடர்ச்சி கண்டு அடியேன்
புரண்டு வீழ்ந்து நின் பொன்மலர்ப் பாதம்
போற்றி போற்றி என்று அன்போடு புலம்பி
அரண்டு என்மேல் வினைக்கு அஞ்சிவந்து அடைந்தேன்
ஆவடுதுறை ஆதி எம்மானே"
பொருள்
சோழன் ஆக்கிய - சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது.
ஆவடுதுறையில் சுந்தரர் பாடிய ஐந்து பாடல்கள் மட்டுமே தேவாரத்தில் உள்ளது. அந்த ஐந்து பாடலும் சிவபெருமானின் திருவிளையாடல்களை தெரிவிப்பதாகவே உள்ளது. இது இரண்டாவது பாடல். முதல் பாட்டில் மார்க்கண்டேயர் வரலாறு.. அடுத்தடுத்து இந்த தேவார பதிகங்களையும் படங்களுடன் காணலாம். அடுத்த தலைமுறைக்கு தேவாரத்தை விளக்கமாக எடுத்துச் செல்ல முயற்சி ....
இந்த புராண கதையின் web link
நன்றி
தேவாரம் தொடரும்
No comments:
Post a Comment